
தமிழரின் அரசியல நிலைமையின் தற்போதைய நிலை – சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய பார்வை.
தற்போதைய நிலையில், வட கிழக்கு தமிழரின் அரசியல் மிகவும் சிக்கலான பிளவுபட்டதும் ஆகவே உள்ளது. இதற்குப் பெரும்பாலும் காரணமாகக் காணப்படுவது தமிழர்பேரவையின் இன்றைய தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆவார், இவரது கட்சியின் சின்னம் “சைக்கிள்” இதுதான் பேரவையின் சின்னமும் ஆகும்.தூசிகட்டியிருந்த தமிழ் பேரவை புதிய சின்னத்தில்,மீண்டும் பதின்மூன்றாம் திருத்ததையும் மாகாணசபையும்,பொருளாதார வளர்ச்சியையும்,மக்களின் வாழ்வையும் சீரளிக்கும் முயற்சில் ஈடுபட்டுள்ளார்.வேதாளம் மீண்டும் முருக்கமரத்தில் ஏறி நிற்கிறது.
வெளிவந்த செய்திக்குறிப்பில், திரு பொன்னம்பலம், எம்.ஏ. சுமந்திரன், தமிழரசுக் கட்சி மற்றும் 2015 ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு பரிந்துரை ஆகியவைபற்றி குறித்தும் தமிழ் மக்களை ஏமாற்றும் வகையில் உருவாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியையும் இனவெறி நோக்கமுடையதாகக் கூறினார்.இந்த யாப்பும் அரசியல் திருத்தமும் வருமா என்ற கேள்வி எழுந்துள்ள சூழலில் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கஜன் மக்களை முட்டாள்கள் என சாடியுள்ளார்.
இப்போது திரு பொன்னம்பலத்தின் அரசியல் அணுகுமுறை கடந்த காலத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மிக முக்கியமான மாற்றம் ஒன்று உண்டு – அவர் இனி தனித்துவமாகச் செயல்படவில்லை. தற்போது, தமிழ் தேசியவாதத்தை முன்னிலைப்படுத்தியதாகக் கூறும் சில பழமையான, சர்ச்சைக்குரிய மற்றும் பொதுமக்கள் ஆதரவை இழந்த அரசியல் தலைவரகளுடன் அவர் கூட்டணி அமைத்துள்ளார். இவர்களில் முக்கியமானோர்: ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், ஐங்கரனேசன், அருண்தவப்பாலன், தவராஜா மற்றும் சமீபத்தில் மோசடிக்குரிய குற்றச்சாட்டுகள் எதிர்கொண்ட சரவணபவன்.
மேலும், நேரடி அல்லாத ஆதரவாளர்களும் உள்ளனர். எடுத்துக்காட்டாக, சிறிதரன் என்பவர், தமிழரசுக் கட்சிக்கும் பொன்னம்பலத்தின் அணிக்கும் இடையில் இரட்டைவேடத்தில் செயல்படுவதாக பரவலாக நம்பப்படுகிறது. அதுபோல, டெலோவின் அடைக்கலநாதன் சமீபத்திய அரசின் பட்ஜெட்டுக்கு வாக்களித்தபோதிலும், இக்கூட்டணியில் இணையத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. டெலோ இன்னும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (DTNA) உறுப்பினராகவே உள்ளது.
இந்த உருவாகும் கூட்டணி, மக்கள் நலனுக்கான அரசியல் மாற்றங்களையோ, தனித்துவமான கொள்கையையோ முன்வைப்பதற்கான முயற்சியாக இல்லை. இது முழுமையாக சுமந்திரன் மற்றும் NPP கட்சிக்கெதிரான பழிவாங்கும் எண்ணமும், இனவெறிக்குரிய மனப்பாங்கும் காரணமாகவே உருவாகியுள்ளது.உள்ளூர் மக்களின் நலனை புறக்கணித்து பாரளமன்ற தேர்தல் பிரச்சாரமாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
திரு பொன்னம்பலம் «தூய தமிழ் தேசியவாதம்» எனும் அடையாளத்தை முன்வைக்கும் நிலையில், பல முக்கியமான கேள்விகள் எழுகின்றன. இவருடன் இப்போது இணைந்துள்ளவர்கள் யார்? தமிழ் தேசியவாதத்தை உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழத்தலைவர்களா? சுவாரசியமாக, இவர்களில் பலர் முன்பு தமிழரசுக் கட்சி மற்றும் முன்னாள் ஆயுத அமைப்புகளின் உறுப்பினர்களாக இருந்தவர்கள் – அதாவது கஜனின் முந்தைய அரசியல் எதிரிகள்.
இந்த கூட்டணிகள் புகழுக்கோ, பணத்திற்கோ அல்ல. வரவிருக்கும் உள்ளூராட்சி தேர்தலில் தோல்வியை எதிர்நோக்கும் ஒரு கூட்டுப் பயம் மற்றும் அரசியல் பின்தங்கிய நிலைமையிலிருந்தும் இந்த அணிகள் உருவாகியுள்ளன. இவர்கள் தமிழ் மக்களின் நலனுக்காக செயற்படவில்லை; மாறாக சுமந்திரனையும் NPPயையும் எதிர்த்து செயல்படுகின்றனர்.
விசித்திரமானது என்னவென்றால், இக்குழுவில் இருப்பவர்களில் சிலர், மாகாண சபைகளின் நடைமுறை மற்றும் 13ஆவது திருத்தச் சட்டத்தின் முழுமையான அமலாக்கத்திற்கு முன்பாக வலியுறுத்தியவர்களாகவும், சிலர் மாகாண அமைச்சர்களாகவும் இருந்துள்ளனர். ஆனால் இப்போது, பொன்னம்பலத்துடன் சேர்ந்த நிலையில், இவர்கள் மாகாண சபைகளையும், 13ஆவது திருத்தத்தையும் எதிர்க்கின்றனர் – இது அவர்களது முந்தைய நிலைப்பாடுகளுக்கு முரணானது.
இதனால் சில முக்கியமான கேள்விகள் எழுகின்றன: உள்ளூராட்சி தேர்தலுக்குப் பிறகு மாகாண சபைத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டால் இவர்கள் என்ன செய்வார்கள்? தேர்தலில் போட்டியிடுவார்களா? அல்லது, மக்களை மீண்டும் குழப்பும் ஒரு புதிய யுக்தியை உருவாக்குவார்களா? அல்லது பல பிரிவுகளாகப் பிரிந்து, சிலர் பொன்னம்பலத்தை விட்டு விலகி, DTNA-வுடன் மீண்டும் இணைய முயல்வார்களா?
இந்த விதமான மாற்றமடையும் அரசியல் நிலைப்பாடுகள், தமிழ் அரசியலை ஒரு பரிதாபமான நிலைக்கு கொண்டு செல்லும் அபாயம் உள்ளது. இது ஒரு முக்கியமான சந்தேகத்தையும் எழுப்புகிறது – இந்த அரசியல் தலைமைகள் தமிழ் மக்களை எளிதில் ஏமாற்றக்கூடியவர்களாகவே எண்ணுகிறார்களா?
இது போன்ற சூழ்நிலையில், தமிழ் மக்கள் விழிப்புடன் இந்த அரசியல் கூட்டணிகளையும், அவர்களது நிலைப்பாடுகளையும் விமர்சனப் பார்வையில் ஆராய்ந்து, உண்மையான மாற்றத்தையும் நோக்கையும் கொண்ட தலைமைத்துவத்தை தேர்ந்தெடுப்பது அவசியமாகிறது.
குற்றமுள்ள மனம் குறுகுறுக்கத் தொடங்கி விட்டது.
திருடரா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.
நன்றி
ராஜ் சிவநாதன்