
இசையமைப்பாளர் ராஜேஷ் அவர்களின் இசையில் கோபக்காரி பாடலை தமிழகத்தில் இருந்து பிரபல பாடகருடன் இணைந்து பிரான்ஸ் முன்னணி பாடகி சுதாஜினி சுகுமார் அவர்கள் பாடவுள்ளார்.
ஒரு பாடல் பாடி முடிந்த சில நாட்களில் அடுத்த பாடலை தங்கை சுதாஜினி சுகுமார் அவர்கள் பாடுவதற்குக் காரணம் திறமை மட்டும் அல்ல, சொந்தப் பாடல்கள் பாடுவதில் உள்ள ஆர்வம்.
முதல் பாடல் பாடிய போதே அடுத்த பாடல் எப்போது என்று கேட்ட போதே அவருடைய ஆர்வம் தெரிந்தது.
இந்தப் பாடலை நான் பாடக் கேட்ட போதே உடனே ஆம் என்று சொல்லி விட்டார். அடுத்தவர்களின் ஆசீர்வாதமும் தேவைப்படவில்லை. யாருக்கும் அஞ்சி நடுங்கவும் இல்லை.
மூத்த கலைஞர் அண்ணன் கலையருவி கே.பி.லோகதாஸ் அவர்கள் இந்த ஆண்டு பாடகி சுதாஜினி குறைந்தது ஐந்து பாடலையாவது பாடவேண்டும் என்று கூறியிருந்தார்.
வருகின்ற மாதம் மூன்றாவது பாடலில்; மற்றுமொரு ஜோடிப் பாடலில் பாடகி இணையவுள்ளார். கோபக்காரி பாடலின் ஒலி/ஒளிப்பதிவு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
பாடல் எப்படி இருக்கும்? அப்படி அப்படி இருக்கும்….!