
யாழில் (Jaffna) மகளிர் இல்லமொன்றில் தங்கியிருந்த யுவதியொருவர் (வயது 22) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (25.04.2025) தெல்லிப்பழையில் உள்ள மகளிர் இல்லமொன்றில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் சடலம்யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், இறப்புக்கான காரணம் தொடர்பில் இன்னமும் உத்தியோகபூர்வமான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.