
தலைநகர் டெல்லியின் துக்லகாபாத் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் சர்மா. இவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவரின் மகன் ரோஷன் சர்மா (வயது 23). இவர் கடந்த 3 ஆண்டுகளாக ராஜஸ்தானில் உள்ள கோடா பகுதியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்தார்.
இதனிடையே, கடந்த சில நாட்களுக்குமுன் ரோஷன் சர்மாவின் தந்தை, தாயார் கோடா நகருக்கு சென்றுள்ளனர். அங்கு நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்றது போதும் வீட்டிற்கு வந்துவிடு என ரோஷன் சர்மாவிடம் கூறியுள்ளனர். அதற்கு மாணவன் மறுப்பு தெரிவித்துள்ளான். இதையடுத்து, ரோஷன் சர்மாவின் உடைமைகளை எடுத்துக்கொண்டு பெற்றோர் டெல்லி வந்துள்ளனர்.