
குற்றப் புலனாய்வுத் துறையினரின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையானின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் தொடர்ந்து சோதனை நடத்தப்படுகிறது.
குற்றப் புலனாய்வுத் துறையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
பிள்ளையானின் மட்டக்களப்பு அலுவலகத்தில் சமீபத்தில் சோதனை நடத்தப்பட்டு, ஏராளமான முக்கிய ஆவணங்கள், பல கைத்தொலைபேசிகள் மற்றும் ஒரு செயற்கைக்கோள் தொலைபேசி என்பன கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.