
புத்தூர் சோமஸ்கந்த இந்திரஜிதின் மூர்க்கத்தனமான தாக்குதல் உயிர் மார்க்க முனைந்த மாணவன்..மூடி மறைக்கும் கோப்பாய் பிரதேச செயலக அதிகாரிகள்
யாழ் புத்தூர் சோமஸ்கந்தவில் கல்வி பயிலும் மாணவனை அதே பாடசாலை ஆசிரியர் இந்திரஜித் சப்பாத்துகாளினால் தாக்கிய நிலையில் மனமுடைந்த மாணவன் வீட்டில் சென்று விவசாய தேவைக்காக வைத்திருந்த கிருமிநாசினியை அருந்தியுள்ளான்.
குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது பாதிக்கப்பட்ட மாணவன் தனக்குத் தெரியாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்கு சென்றதாக தெரிவித்து குறித்த மாணவனை இழுத்துச் சென்று மேல் மாடியில் வைத்து காலின் பெருவிரலை தனது சப்பாத்து காலினால் நெரித்து ஆசிரியரான இந்திரஜித் தாக்கியுள்ளான்.
அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
மாணவனை சப்பாத்து காலினால் உழக்கிய இந்திரஜித் ஏற்கனவே அச்சுவேலியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கிய நிலையில் கோப்பாய் பிரதேச செயலக அதிகாரிகள் அவன் மீது நடவடிக்கை எடுக்காமல் விட்டனர்.
கோபாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய உதவி பிரதேச செயலாளர் இந்திரஜித் நெருங்கிய ஆள் என்பதால் கீழ் நிலை அதிகாரிகளை நடவடிக்கை எடுக்க விடாமல் தனது அதிகாரத்தின் மூலம் காப்பாற்றினார்.
குறித்த ஆசிரியரான இந்திரஜித் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வரும் பாடசாலையில் இதுபோன்று பல மாணவர்களை மூர்க்கத்தனமாக தாக்கி உள்ளதாக பாடசாலை வட்டாரங்களில் இருந்து அறிய முடிகிறது.
எப்போது இடம் பெற்ற சம்பவத்தை மூடி மறைப்பதற்கு இவரின் அல்லகையான குடும்பப் பெண் ஒருவரின் உதவியுடன் மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்திரஜித் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் போனால் கோபாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் ஒருவருக்கும் அவனுக்கும் உள்ள தொடர்பு அம்பலப்படுத்தப்படும்