
இன்று 16.06.2025 அம்பாறை திருக்கோயில் பிரதேசம் பொதுச் சந்தை தொகுதிக்கு முன்பாக சிவில் சமூகத்தினரும் அம்பாறை மாவட்ட வலிந்து கானாமலாக்கப்பட்ட சங்கத்தினரும் இணைந்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்கெதிராக நடந்த அநீதிகளுக்கு நீதி கேட்டு கவணயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடாத்தினர்.
இதில் அம்பாறை மாவட்ட வலிந்து கானாமலாக்கப்பட்ட உறவுகள் , சிவில் சமூக பிரதிநிதிகள் , அரசியல் கட்சியினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது
*கையளிக்கப்பட்ட உறவுகள் எங்கே?
*உகந்தை மலையில் ஆக்கிருமிக்கப் பட்டுள்ள புத்தர் சிலையை நீக்கு
*செம்மணி புதை குழிக்கு சர்வதேச விசாரணை வேண்டும்
போன்ற கோசங்கள் எழுப்ப பட்டன.