
யாழ்ப்பாணம் (Jaffna) – குருநகர் பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 19 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞன் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்து 11 கிராம் கஞ்சா மீட்கப்பட்டது.
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குருநகர் காவல்துறை காவலரணில் கடமையில் இருந்த காவல்துறையினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.