
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் இலங்கை வந்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் 2016 பிப்ரவரிக்குப் பிறகு இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
தனது விஜயத்தின் போது, ஆணையாளர் டர்க் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார். அவர் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர், மேலும் பல அமைச்சரவை அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மதத் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், இராஜதந்திர சமூக உறுப்பினர்கள் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் ஆகியோருடனும் சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.