Skip to content
Dezember 15, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • மாமனிதர் தராகிக்கு விருது!
  • தாயக செய்திகள்

மாமனிதர் தராகிக்கு விருது!

ஈழத்தமிழன் Dezember 14, 2025 1 minute read
sivar (1)

தாரகி அல்லது தராக்கி என்று பரவலாக அறியப்பட்ட மாமனிதர் தர்மரட்ணம் சிவராம் அவர்களின் துணிகரமான பத்திரிகைச் செயற்பாட்டுக்காக பிரித்தானியாவில் அவருக்கு வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுள்ளது. 

மாமனிதர் சிவராமின் ஆழமான பகுப்பாய்வுக்கும், தாயகத்தின் நெருக்கடியான போர்ச் சூழலில் அவர் செயலாற்றிய வீரத்துக்குத் தலைவணங்கியும் இலங்கையில் நடந்தேறும் அரச ஒடுக்குமுறையை உலகுக்கு அம்பலப்படுத்திய செயற்பாட்டுக்குமாக வரதகுமார் நினைவு விருது இலண்டனில் 2025 டிசம்பர் 13 ஆம் நாள் சனியன்று வழங்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு உபகரணங்கள்

1979 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து முதலில் தமிழ்நாட்டை மையமாகக் கொண்டும் பின்னர் பிரித்தானியாவை மையமாகக் கொண்டும் ஈழத்தமிழர் அரசியல், மரபியல், மனித உரிமை ஆகிய விடயதானங்களை தரவுப்படுத்துவதில் தமிழ் தகவல் நடுவம் (Tamil Information Centre, TIC) என்ற அமைப்பு தொடர்ச்சியாக இயங்கிவருகிறது. 

யாழ்ப்பாணத்தில் இருந்து ஈழத்தமிழரிடையே சுதந்திரன் என்ற பத்திரிகை இயங்கியதற்குச் சமாந்தரமாக, ஆனால் கட்சிசார்பற்ற சுயாதீன ஆங்கில வாராந்தப் பத்திரிகையாக சற்றர்டே றிவியூ இயங்கிவந்தபோது அதன் ஆசிரியராக மறைந்த மூத்த பத்திரிகையாசிரியான எஸ். சிவநாயகம் பணியாற்றியிருந்தார். அவர் தமிழ் தகவல் நடுவத்தில் இணைந்து பிற்காலத்தில் காத்திரமான தரவுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டிருந்த போது அவரோடு நெருக்கமாகப் பணியாற்றிய வைரமுத்து வரதகுமார் (1949-2019) நடுவத்தின் பணிகளை அதன் முழுநேரச் செயற்பாட்டாளராகவும் வாழ்நாட் செயற்பாட்டளராகவும் தொடர்ச்சியாக மேற்கொண்டுவந்தார். 

அத்தகைய பாரம்பரியம் கொண்ட தமிழ் தகவல் நடுவத்தால் ஆண்டுதோறும் மனித உரிமை நாளை ஒட்டி வரதகுமார் நினைவு விருது வழங்கப்பட்டுவருகிறது. 

பிரித்தானியாவில் இருந்து இயங்கும் அந்நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞரான போல் ஹெரன் என்பவருக்கும் இரண்டாம் தலை முறை ஈழத்தமிழர் வழக்கறிஞையான சாந்தி சிவகுமாரனுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான மனித உரிமை விருது வழங்கப்பட்டது. 

பிரித்தானியாவில் ஈழத்தமிழர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட இலங்கைத் தூதரலாயத்தில் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவருக்கெதிரான சட்ட நடவடிக்கை உள்ளடங்கலாக பல சட்ட நடவடிக்கைகளில் இவர்கள் ஈடுபட்டிருந்தமைக்கான அங்கீகாரமாக மனித உரிமை விருதுகள் வழங்கப்பட்டன. 

மாமனிதர் சிவராமுக்கான சிறப்பு விருதை அவரின் மனைவி பிள்ளைகளிடம் சேர்க்கும் முகமாக தமிழ்நெட் ஆங்கில ஊடகத்தின் நிறுவக ஆசிரியரும் சிவராமின் நெருங்கிய ஊடக நண்பருமான ஜெயா கோபிநாத் (நோர்வே) பெற்றுக்கொண்டு சுருக்கமான நினைவுரை ஒன்றையும் நிகழ்வில் வழங்கியிருந்தார். 

தனது உரையின் போது மாமனிதர் சிவராமின் துணைவியாரும் அவர்களது மகனும் இரு மகள்மாரும் இந்த விருது வழங்கிய நிகழ்வைக் காணும் போது தமிழினம் மாமனிதர் சிவராமின் மீது நன்றியறிதலோடு இருப்பதைக் குறிப்பெடுத்துக்கொள்வார்கள் என்று தெரிவித்தார். சிவராம் தான் வாழ்ந்த காலத்தில் தனது வாழ்க்கையில் இனி எந்த அங்கீகாரமும் ஒரு விடயத்தை விட பெரிதாக அமையாது என்று தனக்குக் கூறியிருந்ததாகத் தெரிவித்த ஜெயா, அந்தச் சம்பவத்தையும் அங்கு விவரித்தார். 

2004 நவம்பர் மாவீரர் நாளை ஒட்டிய நாட்களில் தேசியத்தலைவர் சிவராமை அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களோடும் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் பொட்டு அவர்களோடும் சந்தித்தபோது தலைவர் பிரபா சிவராமின் கைகளைத் தனது இரண்டு கைகளாலும் இறுகப்பற்றி கொழும்பில் இருக்கவேண்டாம் என்றும் தற்காலிகமாக ஆதல் வெளிநாட்டில் தங்கியிருக்குமாறும் கண்கள் பனிக்க வேண்டிக்கொண்டார் என்றும் அதைவிடத் தனக்குப் பெரிய அங்கீகாரம் வேறு எதுவும் வாழ்க்கையில் தேவையில்லை என்று சிவராம் தனக்குப் பெருமையோடு தெரிவித்திருந்ததாகவும் ஜெயா அங்கு குறிப்பிட்டு, சிவராமின் குடும்பத்தினர் சார்பாக அந்த விருதுக்கான ஏற்புரையை வழங்கினார். 

Post navigation

Previous: கொலை:குற்றவாளிக்கு மரணதண்டனை !
Next: ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி!

Related Stories

kaithu
  • தாயக செய்திகள்

மூங்கிலாறு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
raj (1)
1 minute read
  • தாயக செய்திகள்

நோ்மையுடன் இலங்கையை மீண்டும் எழுப்பவேண்டும்.

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
images
1 minute read
  • தாயக செய்திகள்

யாழில். புதுவகை மோசடி ?

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025) 20.12
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

Dezember 15, 2025 0
தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தேசத்தின் குரலுக்கு த.தே.ம.முன்னணி அஞ்சலி

Dezember 14, 2025 0
வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல் anton
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

வடமராட்சியில் இடம்பெற்ற ‚தேசத்தின் குரல்‘ அன்ரன் பாலசிங்கத்தின் நினைவேந்தல்

Dezember 14, 2025 0
பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0

பிரதான செய்திகள்

6b5d71fe-da14-4c9e-bd43-93e8ecdeed32
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)

ஈழத்தமிழன் November 22, 2025 0
மரண அறிவித்தல் அமரர் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா) ஜூன் 15, 1941 நவம்பர் 22, 2025 புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்...
மேலும் Read more about துயர் பகிர்தல் திருமதி மாகிறேற் ஞானப்பிரகாசம் (செல்லம்மா)
துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி 585187309_10162885177314504_7125978939593748051_n
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் கந்தையா மங்கையர்க்கரசி

November 21, 2025 0
டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம் keer (1)
  • துயர் பகிர்தல்

டென்மார்க்கில் நடந்த உதைபந்தாட்டப் போட்டியில் யாழ் இளைஞன் மரணம்

November 18, 2025 0
துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன் துயர் பகிர்வுr (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நாச்சிமார் கோவிலடி»வில்லுப்பாட்டு» இராஜன்

November 18, 2025 0
துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி v (1)
  • துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் சதாசிவம் விநாயகமூர்த்தி

November 16, 2025 0

ஆக்கங்கள்

w
1 minute read
  • திரைப்பக்கம்

பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.

ஈழத்தமிழன் September 23, 2025 0
Ibctamil தயாரிப்பிலும் நவயுகா இயக்கத்திலும் உருவாக்கப்பட்ட பொம்மை திரைப்படம் 22.09.2025 இன்று மட்டக்களப்பு சுகந்தி திரையரங்கில் திரையிடப்பட்டது. பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை...
மேலும் Read more about பொம்மை திரைப்படம் பெருமளவான மக்கள் இந்த திரைப்படத்தை பார்வையிட வருகைதந்திருந்தார்கள்.
செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம் pommai
  • திரைப்பக்கம்

செப்டம்பர் 19ஆம் திகதி திரைக்கு வருகிறது ஈழத்தின் பொம்மை திரைப்படம்

September 3, 2025 0
யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம். 524345411_1341398317995483_7021057234526287065_n
  • திரைப்பக்கம்

யாழ்/நீர்வேலியில், சினிமா தொழில்நுட்பத்தில் ட்ரீம்லைன் திரைப்பட நிறுவனம்.

Juli 28, 2025 0
இலங்கைக்கான படையெடுப்பு? ravi
  • திரைப்பக்கம்

இலங்கைக்கான படையெடுப்பு?

Juli 20, 2025 0
இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்! Cinema_tharshi_vedan
  • திரைப்பக்கம்

இசையமைப்பாளராக களமிறங்கும் பிரபல ராப் பாடகரான வேடன்!

Juli 14, 2025 0
loading...

மீள் பார்வைக்கு

20.12
1 minute read
  • நிகழ்வுகள்
  • நினைவில்

தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் – பிரிகேடியர் சு. ப. தமிழ்செல்வன் – வணக்க நிகழ்வு (20.12.2025)

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
kaithu
  • தாயக செய்திகள்

மூங்கிலாறு பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 5 பேர் கைது

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
raj (1)
1 minute read
  • தாயக செய்திகள்

நோ்மையுடன் இலங்கையை மீண்டும் எழுப்பவேண்டும்.

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0
1765771318-PTA
1 minute read
  • Uncategorized

பயங்கரவாதத் தடுப்புக்கு மாற்றீடான புதிய சட்டமூலம்

ஈழத்தமிழன் Dezember 15, 2025 0

Posts Grid

images (1)
1 minute read
  • அறிவியல்

யேர்மனியில் Rheinhessenனில் அமைய இருக்கும் புதிய ஆலயப்பணிக்கு உதவ பக்தர்களுக்கு வேண்டுகோள்

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
ad (1)
1 minute read
  • அறிவியல்

அடோப் ஃபோட்டோஷாப், அக்ரோபேட் ChatGPT-யில் இணைக்கிறது

ஈழத்தமிழன் Dezember 12, 2025 0
Chinies astronauts (1)
1 minute read
  • அறிவியல்

204 நாட்களுக்கு பின்னர் பூமிக்குத் திரும்பிய சீன விண்வெளி வீரர்கள்

ஈழத்தமிழன் November 16, 2025 0
Elon
1 minute read
  • அறிவியல்

ஸ்பேஸ்எக்ஸ் 11வது ஸ்டார்ஷிப் சோதனைப் பயணத்தை நிறைவு செய்தது

ஈழத்தமிழன் Oktober 15, 2025 0
1760245914
1 minute read
  • அறிவியல்

சீனா தனது கிராவிட்டி-ஒன் ரொக்கெட்டை விண்ணில் செலுத்தியது!

ஈழத்தமிழன் Oktober 12, 2025 0
Tendencias-Tik-Tok-1
1 minute read
  • அறிவியல்

TikTok தளத்தின் விதிமுறைகள் தமிழில்

ஈழத்தமிழன் August 18, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.