யாழ். வசாவிளான் மத்திய கல்லூரியூடாக அச்சுவேலி நோக்கி செல்லுகின்ற சுமார் 2 கிலோமீட்டர்கள் தூரம் கொண்ட வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (01.11.2024) நடைபெறவுள்ளது.
இராணுவ முகாமுக்கு அருகாமையில் உள்ள குறித்த வீதியானது நீண்ட காலமாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் அண்மையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுடனான சந்திப்பின்போது குறித்த வீதியை நிறைந்து வைத்து, மக்களின் போக்குவரத்துக்கு வழி சமைக்குமாறு கோரிக்கையை முன்வைத்தார்.
அந்தவகையில் இன்றையதினம் குறித்த வீதியானது யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவால் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாணம் பலாலி வீதி – வயாவிளான் சந்தி – தோலகட்டி சந்தி வரையிலான வீதி இன்று திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியம்,ராஜ் சிவநாதன்;
- யாழில். ஒரு இளைஞனின் மரணம் இரண்டு உயிர்களை காப்பாற்றியது.
- அர்ச்சுனா இராமநாதன் தையிட்டி மக்களுடைய போராட்டத்தை அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்து சுயநல அரசியலால்!
- நேற்று இரவு நடந்த விபத்து தொடர்பாக கைது:
- பிரான்சில் மாடுகள் படுகொலைக்கு எதிர்ப்பு:
