
யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் நல்லூர் பிரதேச சபை ஊழியர் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டார்.
சடலமாக மீட்கப்பட்டவர் நல்லூர் பிரதேச சபையில் மேற்பார்வையாளராகக் கடமையாற்றும் 43 வயதுடைய, மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கோப்பாய் பொலிஸார், சடலத்தினை உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.
உடற்கூற்று பரிசோதனையில், சுருக்கிட்டதாலேயே மரணம் சம்பவித்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இலங்கை – இந்திய சுற்றுலாத்துறை எல்லைகள் கடந்து மேம்பட வேண்டும்
- காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் நீதிக்கான போராட்டம் தொடர்பில் கேட்டறிந்த பிரிட்டன் தூதுவர்
- பிறந்தநாள் வாழ்த்து திரு.பாலகிருஸ்ணன் 19.06.2025
- ஜனாதிபதியின் ஜேர்மன் விஜயம் குறித்து வெடித்த புதிய சர்ச்சை
- பிரித்தானியாவில் இலங்கைத் தமிழருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்