
மாவீரர் நாளில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை அவரது வீட்டில் வைத்து உயிரிழந்த சம்பவம் ஒன்று முல்லைத்தீவில் (Mullaitivu) பதிவாகியுள்ளது.
குறித்த மனதை உருக்கும் சம்பவம் நேற்றையதினம் (27.11.2024) முள்ளியவளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
தாயகத்திற்காக போராடி வீரச்சாவடைந்த மறவர்களை உணர்வெழுச்சியுடன் பூசிக்கும் மாவீரர் நாள் நேற்றையதினம் தாயகம் உட்பட புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்நிலையில் முல்லைத்தீவில் நேற்றையதினம் இடம்பெற்ற மாவீரர் நிகழ்வில் மகனுக்காக சுடர் ஏற்றிவிட்டு சென்ற தந்தை ஒருவர் அவரது வீட்டில் வைத்து உயிரிழந்துள்ளார்.
இசைக்கலைஞன் என்ற மாவீரரின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.