
அமரர் நாகராசா மோகனதாசன் (முல்லை மோகன் ) அவர்களின் துயரச் செய்தி எமக்கு மிகுந்த கவலையைத் தந்தது.
அவர் STS தமிழ் தொலைக் காட்சி சார்பாக என்னை அழைத்து பல நேர்காணல்களைச் செய்தவர். தொலைப்பேசி ஊடாக அவருடன் உரையாடியபோது அவரின் தாயகப் பற்று தமிழ் மொழிப் பற்று ஆகியவற்றையும் அதன்பால் அவர்கொண்டுள்ள ஈடுபாட்டையும் உணரக் கூடியதாக இருந்தது.
அவரின் இழப்பால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஊடகத்துறையினருக்கும் ளுவுளு தொலைக் காட்சி நிறுவனத்தினருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சார்பாக எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழர் தலைவிதி தமிழர் கையில்! தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்!
வி. ருத்ரகுமாரகன்
விசுவநாதன் ருத்ரகுமாரன் பிரதமர்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
