Skip to content
Dezember 10, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • புலத்தில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
  • புலத்தில்
Watch
  • Home
  • தாயக செய்திகள்
  • தமிழின அழிப்பு நினைவகம்: கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன்நன்றி தெரிவிப்பு
  • தாயக செய்திகள்

தமிழின அழிப்பு நினைவகம்: கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் சிறிதரன்நன்றி தெரிவிப்பு

ஈழத்தமிழன் Mai 22, 2025
Sritharan

கனடாவின் பிரம்டன் நகரில் இனப்படுகொலை நினைவுத்தூபி அமைக்கப்பட்டமை காலப்பெறுமதி மிக்க செயல் என்றும், அதற்கு ஈழத்தமிழர்கள் சார்பில் கனேடிய அரசுக்கு நன்றி கூறுவதாகவும் கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷிடம் தெரித்துள்ள இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறிதரன், இதுகுறித்து கனேடியப்பிரதமர் மார்க் கார்னி மற்றும் பிரம்டன் நகர மேயர் பற்ரிக் பிரவுன் ஆகியோருக்கு எழுதிய கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் கையளித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை புதன்கிழமை (21) கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரகத்தில் சந்தித்த சிறிதரன், இச்சந்திப்பின்போதே மேற்குறிப்பிட்டவாறு தமிழ்மக்கள் சார்பில் தனது நன்றியை வெளிப்படுத்தினார்.

அதேவேளை ஏற்கனவே கனேடிய பிரதமர் மற்றும் பிரம்டன் நகர மேயருக்கு நன்றியை வெளிப்படுத்தி கடந்த 19 ஆம் திகதி மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைத்த கடிதத்தையும் உயர்ஸ்தானிகரிடம் நேரில் கையளித்தார். அக்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கைத்தீவின் அளவிற் சிறிய தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படும் தமிழ்த்தேசிய இனம் மீது, இலங்கை அரசால் வலிந்து மேற்கொள்ளப்பட்ட மனிதப் பேரவலத்தை ‚இனப்படுகொலை‘ என்று ஏற்றுக்கொண்ட முதலாவது நாடான கனடாவின் பிரம்டன் நகரில், தமிழினப் படுகொலை நினைவுத்தூபி நிறுவப்பட்டு, வலிசுமந்த மாதமான மே மாதத்தில்; திறந்துவைக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட எமது மக்களின் மனக்காயங்களுக்கு மருந்தாய் அமைந்துள்ளதை நன்றியோடு பதிவுசெய்கிறேன்.

ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட போரின் அறமீறல்கள் குறித்தும், போர் முடிவுற்றதன் பின்னரான கடந்த 15 ஆண்டுகளில் எமது மக்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் மீதும், கூட்டுப் பண்பாடுகள் மீதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிலும்; கரிசனையோடிருக்கும் கனேடிய அரசினால், ஈழத் தமிழினம் சார்ந்து சமகாலத்தில் முன்னகர்த்தப்படும் காத்திரமான செயல்களும், அறிவிப்புகளும் சர்வதேச அரங்கிலும், தமிழ் மக்கள் மனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதை உணரமுடிகிறது.

தங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு பரிகார நீதியைக் கோரிநிற்கிற எங்கள் இனம், கடந்த 15 ஆண்டுகளாக ஏமாற்றங்களை மட்டுமே எதிர்கொள்ள நேர்ந்திருக்கிறது. இலங்கைத் தீவில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டது இனப்படுகொலை தான் என்பதை ஏற்றுக்கொள்ளத் தலைப்படாத உலக அரங்கில், ‚இலங்கையில் நிகழ்ந்தது இனப்படுகொலையே‘ என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொண்டதோடு, இறுதிப்போரின் போது கொல்லப்பட்டோருக்காகவும், மனித உரிமை மீறல்களைச் சந்தித்தோருக்காகவும் தொடர்ந்து நீதிகேட்கும் கனடா, தனது நாட்டின் முதன்மை நகரான பிரம்டனில் ஈழத்தமிழர்களின் அரசியல் தாகத்தை சொல்லும் தமிழீழக் குறியீட்டுடன் கூடிய நினைவுத்தூபியை நிறுவியமையும், தமிழ் இனப் படுகொலையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கனடாவிலிருந்து தாராளமாக வெளியேறலாம் என்ற பிரம்டன் நகர மேயரின் அறிவிப்பும் ஈழத்தமிழர்களுக்கான நீதியின் முகமாக கனடாவை அடையாளப்படுத்தியிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் மீதான இனப்படுகொலையின் நேரடிக் குற்றவாளிகளான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் மற்றும் இராணுவப் பின்புலம் கொண்டவர்களுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதித்தமை, தமிழினப்படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு, நினைவுத்தூபி அமைப்பு, உயிர் அச்சுறுத்தல்களால் புலம்பெயரும் ஈழ அகதிகளுக்கு அரசியல் தஞ்சம் வழங்கல் என ஈழத்தமிழர்கள் சார்ந்து தங்களால் முன்னெடுக்கப்படும் அத்தனை செயல்களும், எமது இனத்தின் அரசியல் விடுதலையில் கனடா நாட்டின் பங்களிப்பு கனதிமிக்கதாக இருக்கும் என்ற பரிபூரண நம்பிக்கையை எமக்கும் எமது மக்களுக்கும் வழங்கியிருக்கிறது.

அந்த நம்பிக்கைக்கான சாட்சியமாக, இனப்படுகொலைக்கான நீதியைப் பெறுவதிலும், எமது மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான எதிர்கால நடவடிக்கைகளிலும் தங்களது இராஜதந்திர வழிகாட்டுதல்கள் மற்றும் மூலோபாயங்கள் எமக்கு துணைசெய்யும் என்ற நம்பிக்கையின் செய்தியாக, மீளவும் ஈழத்தமிழர்கள் சார்பிலான நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Post navigation

Previous: யாழில் யுவதி கடத்தல்
Next: யாழ் மண்ணை வந்தடைந்தார் சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா !

Related Stories

manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
Vavuniyan 2 (1)
  • தாயக செய்திகள்

வவுனியாவிலும் வலிந்து காணாமல் போன உறவுகள் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
amparai 1
  • தாயக செய்திகள்

அம்பாறையில வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டம்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்
  • புலத்தில்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
வெள்ள நீர் பாய்ந்ததால் ஏற்பட்ட  15அடி ஆழமான பள்ளத்தில் தவறுதலாக  மூழ்கிய கற்கிடந்த குளம் பகுதியை சேர்ந்த முருங்கன் மத்திய கல்லூரி (18)வயது...
மேலும் Read more about மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி
ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை ! facebook-logo
  • உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை !

Dezember 10, 2025 0
மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : பரீட்சார்திகளுக்கு வெளியான அறிவிப்பு test
  • இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : பரீட்சார்திகளுக்கு வெளியான அறிவிப்பு

Dezember 10, 2025 0
காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ் dfd (1)
  • இலங்கைசெய்திகள்

காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ்

Dezember 10, 2025 0
தம்பலகாமத்திால் கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள் Tampakamam (1)
  • இலங்கைசெய்திகள்

தம்பலகாமத்திால் கனமழையால் மீண்டும் மூழ்கிய வயல் நிலங்கள்

Dezember 10, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

manna
  • தாயக செய்திகள்

மன்னார் முருங்கன் கல்லூரி மாணவன் வெள்ள நீர் குழியில் விழுந்து பலி

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
facebook-logo
  • உலக செய்திகள்

ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு உள்பட்டோர் சமூக ஊடகம் பயன்படுத்த இன்று முதல் தடை !

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
test
  • இலங்கைசெய்திகள்

மீண்டும் ஆரம்பமாகும் உயர்தர பரீட்சை : பரீட்சார்திகளுக்கு வெளியான அறிவிப்பு

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
dfd (1)
  • இலங்கைசெய்திகள்

காணாமல் போன 203 பேருக்கும் இறப்புச் சான்றிதழ்

ஈழத்தமிழன் Dezember 10, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.