
ரஷ்யாவின் எண்ணெய் மீதான தடைகளை தற்காலிகமாக தளர்த்தும் வகையில், அமெரிக்க கருவூலத் துறை ரஷ்ய கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களை 30 நாட்களுக்கு விற்பனை செய்ய அனுமதிக்கும் புதிய உரிமத்தை வெளியிட்டது.
மார்ச் 12 ஆம் திகதி வாஷிங்டன் நேரப்படி நள்ளிரவு 12:01 மணிக்குள் அல்லது அதற்கு முன் எண்ணெய் பொருட்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் என்று உரிம உரை கூறுகிறது.
இந்த அனுமதி 30 நாட்களுக்கு அல்லது ஏப்ரல் 11 வரை பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கிறது.
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு மத்தியில் எரிசக்தி விலைகள் உயர்ந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முற்றுகையிட்டதால், உலகின் எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு உலக சந்தைகளை அடைவது நிறுத்தப்பட்டுள்ளது.
ஈரானிய உணவு
இந்த நடவடிக்கையை அறிவித்த கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், இது ரஷ்யாவிற்கு பெரிய நிதி உதவியாக இருக்காது என்று கூறினார்.
இந்த குறுகிய கால நடவடிக்கை, ஏற்கனவே போக்குவரத்தில் உள்ள எண்ணெய்க்கு மட்டுமே பொருந்தும், மேலும் ரஷ்ய அரசாங்கத்திற்கு குறிப்பிடத்தக்க நிதி நன்மையை வழங்காது என்று பெசென்ட் எக்ஸ் தளத்தில் எழுதினார்.
