
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே கடந்த புதன்கிழமை பேலியகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார்.
அதனை அடுத்து அவரை விசாரணைக்கு உட்படுத்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் , மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க ஏதுவாக 90 நாட்களுக்கான தடுப்புக்காவல் விசாரணைக்காக அனுமதி பெற்று , தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
