காசாவிற்கான அமைதி சபையில் (Board of Peace) நிறுவன உறுப்பினர்களில் இருவராக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் சேர் டோனி பிளேர் ஆகியோரை டிரம்ப் நிர்வாகம் நியமித்துள்ளது.
டிரம்பின் மத்திய கிழக்கு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜனாதிபதியின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் ஸ்தாபக நிர்வாகக் குழுவில் இடம்பெறுவார்கள் என்று வெள்ளை மாளிகை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அவரது 20 அம்ச திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த அமைதி சபையின் தலைவராக டிரம்ப் செயல்படுவார்.
இது காசாவை தற்காலிகமாக மேற்பார்வையிட்டு அதன் மறுகட்டமைப்பை நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிறுவன நிர்வாகக் குழுவில் ஒரு தனியார் பங்கு நிறுவனத்தின் தலைவரான மார்க் ரோவன், உலக வங்கித் தலைவர் அஜய் பங்கா மற்றும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் கேப்ரியல் ஆகியோரும் உள்ளனர்.
வரும் வாரங்களில் மேலும் பல வாரிய உறுப்பினர்கள் பெயரிடப்படுவார்கள் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
![]()

More Stories
அமெரிக்கா எச்சரிக்கை சீனக் கார்கள் கனடாவுக்குள் அனுமதிப்பதற்கு கனடா வருத்தப்படும்
ஈரானிய அடக்குமுறைக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை ..
பாரசீக வளைகுடாவிற்கு அமெரிக்கா விமானம் தாங்கி கப்பலை அனுப்புகிறது