“நமது நாட்டில் உயர்ந்த தரத்திலான மருத்துவக் கல்வியும் மருத்துவச் சேவையும் இருக்கின்றதையிட்டு நாம் பெருமிதம் கொள்கின்றோம். மருத்துவக் கல்வியின் தரத்தின் மீதே ஒரு சுகாதாரக் கட்டமைப்பின் வலிமையும் அதன் நெகிழ்ச்சித் தன்மையும் தங்கி இருக்கின்றது.
நாட்டிற்குத் தேவையான திறமையான சுகாதார நிபுணர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் உருவாக்குவதற்கு இப்பீடத்திற்கு ஆற்றல் கிடைக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
” இலங்கை மற்றும் சவூதி அரேபிய அரசாங்கங்களின் கூட்டு நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவபீட வளாகத்தை ஜூலை 04ஆம் திகதி மாணவர் பயன்பாட்டிற்குக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார் ..
