ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ வேலைவாய்ப்பு வழங்குவதற்காகப் பாலியல் லஞ்சம் கோரியதாகப் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய் எனத் தெரிவித்து குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் குழுவொன்றினால் இந்த முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
நாமல் ராஜபக்ஷவின் அரசியல் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் நோக்கில் திட்டமிட்டுப் பரப்பப்படும் இத்தகைய போலிப் பிரச்சாரங்கள் மற்றும் காணொளிகளுக்கு எதிராக உடனடி விசாரணை நடத்திச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அக்குழுவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
