காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் இனப்படுகொலைக்கு மத்தியில், இந்த ஆண்டின் முதல் பாதியில் இஸ்ரேலுக்கு சுமார் 800 மில்லியன் யூரோ (930 மில்லியன் டாலர்) மதிப்பிலான இராணுவ உபகரண ஏற்றுமதிக்கு ஜெர்மனி ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட ஏற்றுமதி உரிமங்கள், 2025ம் ஆண்டு முழுவதும் இஸ்ரேலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட மொத்த மதிப்பை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
2025ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதி மீதான பகுதி கட்டுப்பாடுகளை அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸின் அரசாங்கம் நீக்கியதைத் தொடர்ந்து இந்த ஏற்றுமதி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
காசா பகுதியில் தனது இராணுவ நடவடிக்கைகளை விரிவுபடுத்த இஸ்ரேல் முடிவு செய்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 8 ஆம் தேதி காசாவில் பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களின் ஏற்றுமதியை மெர்ஸ் நிறுத்தி வைத்திருந்தார். இந்தக் கட்டுப்பாடுகள் சுமார் மூன்றரை மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருந்தன.
