வீரங்கள் மறைவதில்லை
விதையின்றி பயிரும் இல்லை
விண்மீன்கள் ஆனாலும் அவர்
எண்ணங்கள் மறைவதில்லை
தாயகம் ஒன்றே அவர் நோக்கு
தமிழீழம் ஒன்று அவர் மூச்சு
தம்மை உருக்கினார்
தரைப்படை ஆனார்
தரையில் இருந்து
கடல் படை ஆனார்
எண்ணம் நிறையவே
தாய் மண்ணை நேசித்தார்
எழுந்து படைகளைப்
பொடிப்பொடி ஆக்கினார்
விரைந்த போரில் வித்தாய் உடலம்
தலைசாய்த்து ஒருமுறை மீண்டும்
எழுந்தவர் நம் வீரர்
சோழன் படைவந்த
வீரப் பரம்பரை
சொல்லின்றி எழுந்து
செயலாற்றும் வீரப் பரம்பரை
காலைக் கதிரவன்
கரிகாலன் தலைமையில்
கட்டளை காத்து
வெற்றி முரசு இட்ட
ஈழப் பரம்பரை
காவியமான கண்மணிகள்
கல்லறை நாயகர்கள் ஆனீர்கள்
ஈழப் பரம்பரை வெல்லும் நாள்தனை
விண்ணில் இருந்து கண்டிடும் நாள்வரும்
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (17.09.2026)
