ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுருவில் – மெலிஞ்சிமுனை மயானத்துக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை (24) சுமார் 600 கிலோகிராம் எடையுடைய கேரள கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
கடந்த காலங்களில் கடல் மார்க்கமாகக் கடத்திவரப்பட்டபோது கைப்பற்றப்பட்ட கஞ்சாப் பொதிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய இந்த கேரள கஞ்சா எரிக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை நீதவான், நீதிமன்ற உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், பொலிஸார், கொழும்பிலிருந்து வருகை தந்த அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் ஆகியோர் முன்னிலையில் எரிக்கப்பட்டது.
