அமெரிக்காவின் சமாதான முன்மொழிவுக்கு தெஹ்ரான் அளித்த சமீபத்திய பதிலை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று நிராகரித்த பின்னர், ஈரானுடனான போர் நிறுத்தம் ஆபத்தான நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
திங்களன்று போர் நிறுத்தத்தின் நிலை குறித்துக் கேட்டபோது, டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஈரான் செய்திகள்
அவர்கள் எங்களுக்கு அனுப்பிய அந்தக் குப்பையைப் படித்த பின்னர், தற்போதைக்கு அது மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதாகவே நான் கூறுவேன். நான் அதை முழுமையாகப் படித்து முடிக்கக்கூட இல்லை என்று கூறினார்.
மருத்துவர் உள்ளே வந்து, ஐயா, உங்கள் அன்புக்குரியவர் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட ஒரு சதவீதம் மட்டுமே உள்ளது என்று கூறும் அளவிற்கு, இந்த போர் நிறுத்தம் உயிர்வழி ஆதரவில் உள்ளது என்று அமெரிக்க அதிபர் கூறினார்.
ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட தனது பதிலில், லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் போரை முடிவுக்குக் கொண்டுவர தெஹ்ரான் அழைப்பு விடுத்ததுடன், போர்ச் சேதங்களுக்கு இழப்பீடு கோரியது மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீதான தனது இறையாண்மையை வலியுறுத்தியது.
தனது கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், மேலும் தாக்குதல்கள் நடைபெறாது என்பதற்கு உத்தரவாதம் அளிக்கவும், தடைகளை நீக்கவும், ஈரானிய எண்ணெய் விற்பனை மீதான தடையை அகற்றவும் ஈரான் அமெரிக்காவை வலியுறுத்தியுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டம் உள்ளிட்ட, மேலும் சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு முன்னோடியாக, சண்டையை முடிவுக்குக் கொண்டுவர வாஷிங்டன் முன்மொழிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
