குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து இருவர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
குருவிட்ட சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை, சிறை அதிகாரிகள் குறைந்தபட்ச பலத்தைப் பயன்படுத்தித் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷனா நனயக்கார தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு (6) முதலில் அமைதியின்மை வெடித்ததாகவும், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும் சிறை செய்தித் தொடர்பாளர் முன்னதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இன்று காலை (07) கைதிகளிடையே மீண்டும் பதற்றம் அதிகரித்ததால், சிறையில் நிலவிய பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்த சிறை அதிகாரிகள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர்.
கலவரத்தின் போது கைதிகள் குழு ஒன்று சிறை மருத்துவமனையை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
