Skip to content
Dezember 5, 2025
  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin
eelam 2

Connect with Us

  • Facebook
  • Whatsapp
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
  • Linkedin

Kategorien

  • STS தமிழ் Tv
  • Uncategorized
  • அறிவியல்
  • ஆக்கங்கள்
  • ஆலயங்கள்
  • இந்திய செய்திகள்
  • இலங்கைசெய்திகள்
  • உலக செய்திகள்
  • எம்மைப்பற்றி
  • கவிதை
  • கவிதைகள்
  • தாயக செய்திகள்
  • திரைப்பக்கம்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
  • நினைவில்
  • மருத்துவம்
  • யேர்மன்-செய்திகள்
  • வாழ்த்துக்கள்
  • விளையாட்டு
  • வெளியீடுகள்
Primary Menu
  • Home
  • தாயக செய்திகள்
    • இலங்கைசெய்திகள்
    • உலக செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • யேர்மன்-செய்திகள்
  • துயர் பகிர்தல்
  • நிகழ்வுகள்
    • விளையாட்டு
    • திரைப்பக்கம்
    • நினைவில்
  • மருத்துவம்
  • ஆக்கங்கள்
    • கவிதைகள்
Watch
  • Home
  • இலங்கைசெய்திகள்
  • உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனக்கு தொடர்பில்லை!கூறும் பிள்ளையான்
  • இலங்கைசெய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எனக்கு தொடர்பில்லை!கூறும் பிள்ளையான்

ஈழத்தமிழன் November 23, 2024
pillaiya

நல்லாட்சி அரசாங்கத்தை மக்கள் 2018ஆம் ஆண்டிலேயே புறக்கணித்துவிட்டனர். அதனாலேயே அவ்வாண்டு இடம்பெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி பெற்றது. எனவே கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், நான் சிறைச்சாலையிலிருந்து கொண்டு சதித்திட்டம் தீட்டியதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என ஒட்டுக்குழு தலைவரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (22)  குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலமளிப்பதற்காக முன்னிலையானபோது ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

செனல் 4 வெளியிட்ட காணொளி தொடர்பில் அருட் தந்தையொருவரால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே சீ.ஐ.டி.யில் முன்னிலையாகுமாறு எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை ஆட்சியில் அமர்த்துவதற்காகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அஸாத் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.

உண்மையில் 2015 இல் நல்லாட்சி அராசங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்றதன் பின்னர் 2018இல் நடத்தப்பட்ட உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே வெற்றி பெற்றது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் 2019ஆம் ஆண்டு தான் மேற்கொள்ளப்பட்டன. நல்லாட்சி அரசாங்கத்தை 2018ஆம் ஆண்டே மக்கள் புறக்கணித்துவிட்டனர்.

அந்த வகையில் 2018இல் கோட்டாபய ராஜபக்ஷ மாத்திரமல்ல, பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக யாரை நியமித்திருந்தாலும் அவர் வெற்றி பெற்றிருப்பார். மக்களின் மனநிலை அவ்வாறு தான் காணப்பட்டது. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் இதனை தொடர்புபடுத்துவது அடிப்படையற்றது.

எனக்கும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. எனவே யாரையாவது மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர்கள் செயற்படக் கூடாது. எனக்கு எந்த பயமும் இல்லை. பழிவாங்கல் நோக்கத்துடனேயே என்னை விசாரணைக்கு அழைக்கின்றனர். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பதை கண்டறிய வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன போன்றவர்களிடம் கேட்க விடயங்களை என்னிடம் கேட்கக் கூடாது. அவ்வாறில்லை என்றால் இது தொடர்பில் ஜனாதிபதியிடமே கேட்க வேண்டும். புலனாய்வுப்பிரிவினர் ஜனாதிபதியின் கண்களைப் போன்று இருக்க வேண்டும். அவர்கள் உறங்கிக் கொண்டிருந்தால் எம்மால் எதுவும் செய்ய முடியாது. சிறைச்சாலையிலிருந்து கொண்டு இவ்வாறானதொரு சதித்திட்டத்தை திட்டமிட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்றார். 

  • யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்
  • இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்
  • பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை
  • புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்
  • 19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை

Post navigation

Previous: பலாலி அம்மன் ஆலயத்திற்கு செல்ல கட்டுப்பாடு.
Next: குளியாப்பிட்டியவில் ஆற்றில் பாய்ந்த சொகுசு வாகனம் – சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு

Related Stories

5444545
  • இலங்கைசெய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
1000144632
  • இலங்கைசெய்திகள்

ஊடகங்களிற்கு அவசரகாலச் சட்டங்கள்?

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
bus
  • இலங்கைசெய்திகள்

புயல் அனர்த்தம்: 1,500 பேருந்து பயணங்கள் இரத்து

ஈழத்தமிழன் Dezember 4, 2025 0
STS தொலைக்காட்சி நேரலை

நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 belgeam
  • நிகழ்வுகள்

பெல்சியத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

Dezember 3, 2025 0
நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025 norw
  • நிகழ்வுகள்

நோர்வேயில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் – 2025

Dezember 2, 2025 0
சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71 71
  • நிகழ்வுகள்

சுவிசில் எழுச்சியாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் அகவை 71

November 30, 2025 0
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு kansi
  • தாயக செய்திகள்
  • நிகழ்வுகள்

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -அம்பாறை கஞ்சிகுடிச்சாறு

November 29, 2025 0
சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025! swis mavee 25
  • நிகழ்வுகள்

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2025!

November 29, 2025 0
நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025 netha
  • நிகழ்வுகள்

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2025

November 28, 2025 0

பிரதான செய்திகள்

saddam
  • தாயக செய்திகள்

யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
யாழ்ப்பாணம் கரணவாய் பகுதியில் டெங்கு நுளம்பு பரவ கூடிய சூழலை பேணிய 09 ஆதன உரிமையாளர்களுக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது....
மேலும் Read more about யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்
இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் WhatsApp Image 2025-12-05 at 11.08.49
  • தாயக செய்திகள்

இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

Dezember 5, 2025 0
பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை IMG-20251123-WA0045 (1)
  • தாயக செய்திகள்

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை

Dezember 5, 2025 0
புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம் 5444545
  • இலங்கைசெய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

Dezember 5, 2025 0
19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை us (1)
  • உலக செய்திகள்

19 நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுவதற்கு விண்ணப்பிக்கத் தடை

Dezember 5, 2025 0
loading...

ஆக்கங்கள்

483925983_10161026014103372_1908234353712883137_n
  • ஆக்கங்கள்

தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –

ஈழத்தமிழன் September 8, 2025 0
இசையால் இசைவிக்க முடியாத உயிரினம், உலகில் எதுவுமே இல்லை. இசை உயிரினங்கள் அனைத்தையும் துளிர்ப்பிக்க வல்ல ஜீவசக்தி. இந்த இசையை அனுபவிக்கும்போது மனம்...
மேலும் Read more about தமிழ் மொழியும் தமிழ் இசையும்! – க. நவம் –
அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா. 495022101_24130066869912516_6194737849278888130_n
  • ஆக்கங்கள்
  • கவிதைகள்

அவலங்கள் காட்சிகளாய் ஓடிக் கொண்டே ,தயாநிதி தம்பையா.

Mai 4, 2025 0
எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு sainat
  • ஆக்கங்கள்
  • தாயக செய்திகள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் சயனைட் நாவல் கிளிநொச்சியில் வெளியீடு

März 29, 2025 0
பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் janani
  • ஆக்கங்கள்

பிக்பாஸ் யாழ்ப்பாண ஜனனி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம்

Januar 4, 2025 0
என் மனதினில் நுளைந்தவள் silueta-pareja-al-atardecer-lamina-artistica_937834-174
  • ஆக்கங்கள்

என் மனதினில் நுளைந்தவள்

Januar 3, 2025 0
loading...

You may have missed

saddam
  • தாயக செய்திகள்

யாழில் 9 பேருக்கு 72 ஆயிரம் ரூபாய் தண்டம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
WhatsApp Image 2025-12-05 at 11.08.49
  • தாயக செய்திகள்

இந்தியாவின் உதவிக்கு துணைத் தூதுவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
IMG-20251123-WA0045 (1)
  • தாயக செய்திகள்

பழைய பூங்கா உள்ளாக விளையாட்டரங்கின் பணிகளை நிறுத்த நீதிமன்று கட்டளை

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
5444545
  • இலங்கைசெய்திகள்

புதிய பாராளுமன்ற உறுப்பினர் சத்தியப்பிரமாணம்

ஈழத்தமிழன் Dezember 5, 2025 0
Copyright © ஈழத்தமிழன் செய்தித்தளம் All rights reserved. | MoreNews by AF themes.