விளம்பரம்
சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றுவதற்கான தகவலை வழங்கிய காவல்துறை உளவாளி ஒருவரை கொலை செய்வதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுத் தலைவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு முக்கிய சந்தேகநபர்களை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் திகதி கிரிந்த, அந்தகல்வெல்ல கடற்பகுதியில் சுமார் 400 கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஐஸ் போதைப்பொருள் தொகையுடன் ஏழு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
