வவுனியாவில் 50,000 ரூபாய் பெறுமதியான போலி நாணய தாள்களை உடமையில் வைத்திருந்த நபருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு மே மாதம் காலப் பகுதியில் 50,000 ரூபாய் போலி நாணய தாள்களினை உடைமையில் வைத்திருந்த நபருக்கு எதிராக வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணை நடைபெற்று வந்தது.
விசாரணையில்,எதிரியை குற்றவாளியாக கண்ட மன்று, குற்றவாளிக்கு இரண்டு வருட கால சிறைத்தண்டனை விதித்ததுடன், ஒரு லட்சம் ரூபா அபராதம் விதித்தது. அபராத தொகையினை செலுத்த தவறின் மேலும் ஒரு ஆண்டு கால சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் மன்று தீர்ப்பளித்தது
