இந்தக் கோடையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெப்ப அலையைத் தொடர்ந்து, முதல் முறையாக ஷாம்பெயின் பாட்டிலில் உள்ள மதுபான அளவை அதிகரிக்க பிரெஞ்சு உற்பத்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஒயின் தயாரிப்பாளர்கள் தற்காலிகமாக 15% வரை மதுபானம் கொண்ட ஷாம்பெயினை உற்பத்தி செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் மற்றும் வறட்சி ஆகியவை வழக்கத்திற்கு மாறாக அதிக சர்க்கரை அளவு கொண்ட திராட்சைகளை உருவாக்கியுள்ளன.
நொதித்தல் செயல்பாட்டின் போது ஈஸ்ட் சர்க்கரையை மதுபானமாக மாற்றுகிறது. காலநிலை மாற்றத்தின் காரணமாக “10 முதல் 15 ஆண்டுகளில்” இது ஒரு இயல்பான நிகழ்வாக மாறக்கூடும் என்று கோமிட் ஷாம்பெயின் தொழில்துறை சங்கம் தெரிவித்துள்ளது.
