16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வது அல்லது அதற்கான அணுகலைக் கட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தொடர்பான முன்மொழிவு குறித்து ‘தேசிய சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சங்கம்’ (National Childcare and Protection Society) தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
$அரசாங்கமும் ‘வேர்ல்ட் விஷன்’ (World Vision) அமைப்பும் இது தொடர்பான ஒரு திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
