மாத்தறை முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீற்றரை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்காரணமாக, மறு அறிவித்தல் வரை குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடற்போக்குவரத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு கடற்படையினர் மற்றும் கடற்றொழிலாளர்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
