இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட கடுமையான புயலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மரங்கள் விழுந்தது, கட்டிடங்கள் இடிந்து விழுந்தது மற்றும் மின்னல் தாக்கியதில் குறைந்தது 119 பேர் உயிரிழந்தனர். 79க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் மற்றும் வீடுகள் சேதமடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுமார் 12 மாவட்டங்களில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
பலத்த காற்றினால் மரங்களும் விளம்பரப் பலகைகளும் வேரோடு சாய்வதை தொலைக்காட்யில் காணொளிகள் காட்டின.
பிரயாக்ராஜ் மாவட்டத்தில், பலத்த காற்று குடியிருப்புப் பகுதிகளைச் சூறையாடியதால் மக்கள் பீதியடைந்ததாக விவரித்தனர். புயல் திடீரென வந்தது, சில நிமிடங்களிலேயே வானம் முற்றிலும் இருண்டுவிட்டது என்று ராம் கிஷோர் ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
