முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் சகோதரர் சரத் வீரவங்ச, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தி அரசுக்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
