மாத்தறை, அக்குருகொட சேனாணி கனிஷ்ட வித்தியாலயத்தில் 08 ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த 12 வயது மாணவி ஒருவர் பாடசாலை முற்றத்தில் திடீரென மயங்கி விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மாலிம்பட தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவ்வாறு துரதிஷ்டவசமாக உயிரிழந்தவர் தெலிஜ்ஜவில, கல்எந்தகுட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த பஹந்துவே சிகன்யா மிபுனி என்ற சிறுமி ஆவார்.
