இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னயனாள் தலைவரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் மாவை சோ. சேனாதிராசா அவர்களின் உருவச் சிலைக்கு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஆடி அமாவாசை நாளில் அஞ்சலி செலுத்தினார்.
இதன்போது, கட்சியின் மூத்த தலைவர் கனகசபாபதி, சேனாதிராசா கலையமுதன், கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வாலிப முன்னணித் தலைவர் பிருந்தாபன், கௌரவ உறுப்பினர் சபேசன், சிவஞானம் சிறீதரன் அவர்களின் யாழ்ப்பாண மாவட்ட இணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
