ஐரோப்பாவில் ஜூன் 21-ஆம் திகதி தொடக்கம் வரலாறு காணாத வெப்ப அலை தொடங்கியதிலிருந்து 1,300-க்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது 15 கோடி மக்கள் கடும் வெப்பத்தில் வாடுகின்றனர். நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. மின்சார விநியோக அமைப்புகள் செயலிழந்து வருகின்றன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் எக்ஸ் தொலைக்காட்சியில் கூறினார்.
கடும் வெப்பத்தால் ஏற்படும் சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்காக, ஐ.நா அமைப்பு அதன் உறுப்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக கெப்ரேயெசஸ் கூறினார். இந்தப் பணியில், தயார்நிலை, தடுப்பு மற்றும் வலுவான சுகாதார அமைப்பு சார்ந்த பதிலளிப்புகளில் கவனம் செலுத்துவதும் வெப்ப சுகாதார செயல் திட்டங்களை செயல்படுத்த நாடுகளை ஊக்குவிப்பதும் அடங்கும்.
வெப்ப அழுத்தம் பெரும்பாலும் ‘மௌனக் கொலையாளி’ என்று அழைக்கப்படுகிறது. மேலும் ஐரோப்பிய வீடுகள், பணியிடங்கள் மற்றும் பள்ளிகள் இந்த வெப்பநிலைகளுக்காகக் காற்றுச்சீரமைப்பி ( Air Conditioner ) கட்டப்படவில்லை என்று அவர் கூறினார்.
ஐரோப்பா கொளுத்தும் வெப்ப அலையுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில் யேர்மனி 41.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுடன் மற்றுமொரு வெப்ப சாதனையைப் பதிவு செய்தது.
போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய இரு நாடுகளிலும் ஞாயிற்றுக்கிழமையன்று 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான சாதனை வெப்பநிலை பதிவானது.
செக் தலைநகரான பிராகாவிற்கு வடக்கே சுமார் 50 கிலோமீட்டர் (31 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள டோக்சானி கிராமத்தில், 41.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக செக் வானிலை ஆய்வு நிறுவனமான CHMI தெரிவித்துள்ளது.
