சமூக வலைத்தளத்தில் நபிகள் நாயகம் தொடர்பாக ஆட்சேபனைக்குரிய கருத்தைப் பதிவிட்டதாகக் கூறப்படும் இலங்கை இளைஞர் அனோஜனுக்கு சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவரது இந்த வழக்கு தொடர்பாக பல கோணங்களில் கேள்விகள் எழும்பியுள்ளது. அவையாவன;
நூற்றுக்கணக்கான முஸ்லிம் சமூக ஊடகப் பயனர்கள் அவர்களது கருத்துகள், சுயவிவரம் மற்றும் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்துகொண்டு, மேலும் பல முஸ்லிம்களை தூண்டிவிடுகின்றனர், இவ்வாறான பயனர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
சவுதி அரேபியாவில் நன்கு கட்டமைக்கப்பட்ட ஒரு இஸ்லாமியக் குழு அனோஜன் மீது புகார் அளித்து நடவடிக்கையை முன்னெடுத்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் யார்?
மேலும், சமூக ஊடகத்தில் எழுந்த ஒரு மதரீதியான விவாதம் ஏன் இவ்வளவு தூரம் கொண்டு செல்லப்பட்டது?
சமூக ஊடகத்தில் எழுந்த மதரீதியான விவாதத்திற்காக, ஒருவர் மன்னிப்பு கோரிய பிறகும் கூட, அவரைச் சிறையில் அடைக்க அவர்கள் ஏன் விரும்புகிறார்கள்?
புண்படுத்தும் வகையிலான ஒரு கருத்துக்குப் பதிலாக ஒருவரின் வாழ்க்கையை அழிப்பதே அவர்களின் பதிலாக இருக்குமானால், அவர்கள் உண்மையில் எதைப் பின்பற்றுகிறார்கள்?
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் உண்மையாக இருந்தால், அவருக்கு இழைக்கப்படும் அநீதி தவறு என்று உண்மையாகவே கருதும் முஸ்லிம்கள் குரல் கொடுப்பார்களா?
மேலும், சவுதி தூதரகத்திற்கு வெளியே அமைதியான முறையில் போராட்டம் நடத்தி, அவரைத் திரும்ப அழைத்து வர இலங்கை அரசாங்கத்தின் மீது முஸ்லிம்கள் அழுத்தம் கொடுப்பார்களா?
