நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இலஞ்ச, ஊழல் பற்றிய ச ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி(UNP) தெரிவித்துள்ளது.
வரும் 12 ஆம் திகதி அனுராதபுரம் நகரில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுஜன பெரமுனவின் மக்கள் பேரணியை சீர்குலைப்பதே இதன் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிற்கு நாடு முழுவதும் சென்று கூட்டங்களை நடத்துவதற்கு இருக்கும் ஜனநாயக உரிமை, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவிற்கும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
