யாழ்ப்பாணம் – கோண்டாவில் கிழக்கைப் பிறப்படமாகவும் கனடா ஏஜக்ஸ் நகரை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு அப்பையா சண்முகராஜா அவர்கள் செப்டெம்பர் முதலாம் நாள் (09-01-26) செவ்வாய்க்கிழமை காலமானார். அன்னார் காலஞ்சென்ற அப்பையா – பாக்கியம் இணையரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான அப்பையா – அன்னலட்சுமி இணையரின் அன்பு மருமகனும், பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், கீதன் என்றழைக்கப்படும் விஜிதரன், பத்மரஜனி, சுதர்சினி ஆகியோரின் அன்புத் தந்தையும், சுகிர்தா, ரஞ்சித் ஆகியோரின் அன்பு மாமனாரும், அபினாஷ், அஞ்சனா, ஜஸ்விந்த் ஆகியோரின் அன்புப் பேரனாரும் ஆவார். காலஞ்சென்ற சகுந்தலாதேவி, ராஜேஸ்வரி, காலஞ்சென்ற சிவலிங்கராசா, கமலாதேவி, சந்திராதேவி ஆகியோரின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற குணரட்ணம், நிர்மலாகுமாரன், கனகரத்தினம், தர்மராஜா, காலஞ்சென்ற மகாலிங்கம், குணசிங்கம், காலஞ்சென்ற பரமேஸ்வரன், குணராசா, சிவநேசன், தவமலர், பத்மாவதி ஆகியோரின் மைத்துநரும் ஆவார். அன்னாரின் திருவுடல், 8911 Woodbine Avenue. Markham-இலுள்ள Chapel Ridge Funeral Home and Visitation Centre- இல் செப்டெம்பர் 5-ஆம் நாள் மாலை 5:00 மணி தொடக்கம் இரவு 9:00 மணி வரையும் மறுநாள் செப்டெம்பர் 6-ஆம் நாள் காலை 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரையும் இறுதிவணக்கத்துக்காக வைக்கப்பட்டு, 11:00 மணியிலிருந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 1:30 மணிக்கு, 12492 Woodbine Avenue, Gormley-இலுள்ள, Highland Hills Crematorium-இல் தகனம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். தொடர்புகளுக்கு: மகன் விஜி (கீதன்) – 416-388-8454 மகள் சுதா – 647-299-8454
