முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை கைது செய்யுமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாத்தறை பிரவுன்ஸ் ஹில் பகுதியில் சட்டவிரோதமான முறையில் பணம் திரட்டி, காணி கொள்வனவு செய்ததாக கூறப்படும் வழக்கில் முன்னிலையாக தவறியதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.