அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்க்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றில் இன்றைய தினம் புதன்கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் விசேட அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.
கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளால் ஆயுதங்கள் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பக்கோ இயந்திரத்தின் உதவியுடன் காணியில் பல மணி நேரம் மண் அகழப்பட்ட போதிலும், எந்தவித தடயப் பொருளோ அல்லது சந்தேகத்திற்கிடமான பொருளோ கண்டுபிடிக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அகழ்வுப் பணி நிறுத்தப்பட்டது.
குறித்த பகுதி கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் காணப்பட்ட பகுதியாகவும், அவர்களின் போக்குவரத்து மற்றும் நகர்வுகளுக்கான வழித்தடமாகவும் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
