முக்கியத்துவம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள ஈரானிய இலக்குகள் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்ததால் , செவ்வாய்க்கிழமை மாலை அங்கு மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன.
பண்டர் அப்பாஸ் நகரத்திலும் கெஷ்ம் தீவிலும் மீண்டும் வெடிச்சத்தங்கள் கேட்டன. என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. மேலும், ஈரானின் வளைகுடா எண்ணெய் ஏற்றுமதி முனையங்களில் ஒன்று அமைந்துள்ள லவான் தீவிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக அது குறிப்பிட்டது.
ஹோர்முஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்கள் மீதும், அப்பகுதியில் பணியில் உள்ள அமெரிக்கப் படை வீரர்கள் மீதும் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) சமீபத்தில் நடத்திய தாக்குதல் முயற்சிகளுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூறி, அமெரிக்க இராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதல்களை உறுதிப்படுத்தியது.
பெரிய மற்றும் சக்திவாய்ந்தவை என விவரித்த இந்தத் தாக்குதல்கள், ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளைப் புதைக்க ஈரான் மேற்கொண்ட தோல்வியடைந்த முயற்சிகளுக்கும், ஜோர்டானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டதற்கும் பதிலடியாக நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். அந்த எட்டு ஏவுகணைகளும் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
