நோர்வேயில் கடந்த வாரம் காலமான தனது தந்தை ஐந்தாம் ஹரால்டுக்குப் பின்னர் பதவியேற்ற புதிய மன்னர் எட்டாம் ஹாக்கான் நேற்று செவ்வாய்க்கிழமை ஓஸ்லோவில் உள்ள நாடாளுமன்றத்தில் நோர்வேயின் அரசியலமைப்பிற்கு விசுவாசப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
செப்டம்பர் 9 ஆம் திகதி நடைபெறும் இறுதிச் சடங்கு வரை, பொதுமக்கள் தங்கள் இறுதி மரியாதையைச் செலுத்துவதற்காக ஹரால்டின் உடல்பேளை அரச அரண்மனையின் சிற்றாலயத்தில் வைக்கப்படும் ஒரு நாள் கழித்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஹாக்கான் அரச அரண்மனையிலிருந்து ஓஸ்லோவில் உள்ள ஸ்டோர்டிங் அல்லது நாடாளுமன்றம் வரையிலான குறுகிய தூரத்திற்கு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
புதிய அரசியலமைப்பு மன்னர் பதவியேற்பதற்கு முன்பு, சபாநாயகர் மசூத் கராகானி, ஹரால்டின் மரணம் மற்றும் ஹாக்கனின் வாரிசுரிமை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வாசித்தார்.
சர்வவல்லமையும் எல்லாம் அறிந்தவருமான கடவுளே எனக்குத் துணை, நான் நோர்வே இராச்சியத்தை அதன் அரசியலமைப்பு மற்றும் சட்டங்களுக்கு இணங்க ஆட்சி செய்வேன் என்று வாக்குறுதியும் சத்தியமும் செய்கிறேன் என்று 53 வயதான புதிய மன்னர் எட்டாம் ஹாக்கான் கூறினார்.
விழாவிற்கு முன்னதாக, ஹாக்கனின் மனைவி இராணி மெட்டே-மாரிட் கலந்துகொள்ள மாட்டார் என்று அரண்மனை அறிவித்தது.
ஆனால் ஜூன் மாதம் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்து வருகிறார். தன் விளைவாக, இராணி நாள் முழுவதும் கண்காணிப்பில் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, இராணியால் இன்று ஸ்டோர்டிங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள இயலாது என அறிவிக்கப்பட்டது.
