இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கான உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொண்டு பிரிட்டன் நாட்டிற்கான தூதுவர் அன்ட்ரேவ் பற்றிக் {andrew Patrick}மற்றும் கனடா நாட்டிற்கான தூதுவர் இஷவெல்லா மார்ட்டின் {Isabella Martin} ஆகியோர் ஒரு சில நாட்களாக பல் வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று 05.05.2026 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான ச.சிவயோகநாதன் அவர்களுடனான சந்திப்பானது காலை 8.30 மணிவரை மட்டக்களப்பு பாசிக்குடாவில் உள்ள Clam விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
இதன்போது பல்வேறு பட்ட விடயங்களும் கலந்துரையாடப் பட்டதுடன் பல கோரிக்கைகள் அடங்கிய மனுவும் கையளிக்கப்பட்டது.
கலந்துரையாடப்பட்ட விடயங்களில் சில பின் வருமாறு
மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்கள் பிரச்சனை.
அரசு மூலம் புதிதாக மட்டக்களப்பு மாவட்டத் தில் ஏற்படுத்தப்பட்டு வரும் பண்ணையாளர் சங்கங்கள்.
கானாமலாக்கப் பட்டோ ருக்கான சர்வதேச நீதி பொறிமுறை.
அரச திணைக்களங்கள் மூலமான காணிகள் ஆக்கிருமிப்பு.
அரசின் பிரஜாசக்தி செயற்பாடுகள்.
மற்றும் சமகால அரசியல் தொடர்பாக வும் கலந்துரையாடப் பட்டது.
