கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரை வெளியேற்றி பல உயிர்கள் பலியாவதற்கு காரணமான பொறியியலாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைக்கு அவர்களுக்கு தூக்குத்தண்டனை கொடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன் 6, ம் திகதிகளில் மீண்டுமொரு சூறாவளி ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டிருக்கிறது. அதனால் நிரந்தரமாக இந்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க ஒரு பொறிமுறை தேவையாகும்.
கெலிஓயா நகரம் இந்த முறையும் பல அடி உயரத்துக்கு நீரில் மூழ்கியது. அந்த இடங்களில் தரமற்ற முறையில் கட்டிடங்கள் கட்டப்படுவதே இதற்கு காரணமாகும்.
தித்வா அனர்த்தத்தின் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரே தடவையில் நீரை திறந்துவிட்டதாலே, அன்று நாவலப்பிட்ட உள்ளி பிரதேசங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிர் சேதங்கள் இடம்பெற காரணமாகும்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தி விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறிப்பிட்டார்.
