2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமலேயே உயர் நீதிமன்றம் இன்று (05) தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனு, 2026 உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவையாக தோற்றவுள்ள ஐந்து மாணவர்களால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
