முன்னாள் காவல்துறைத் தலைவர் சி.டி. விக்ரமரத்ன இன்று காலை (17) துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
முல்லேரியாவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே அவர் இறந்துவிட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அவர் இறந்தபோது அவருக்கு 63 வயது. அத்துருகிரியவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, 2019 ஏப்ரல் முதல் பதில் காவல்துறைத் தலைவராகப் பணியாற்றி வந்த அவர், 2020 நவம்பர் 27 அன்று காவல்துறைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1986ம் ஆண்டு உதவி பயிற்சி பொலிஸ் அத்தியட்சகராக, பொலிஸ் சேவையில் இணைந்துகொண்ட சி.டி.விக்ரமரத்ன், 34 வருடங்களுக்கும் அதிக காலம் பொலிஸ் சேவையில் ஈடுபட்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தையடுத்து, பொலிஸ் மா அதிபராக இருந்த பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுமுறையில் அனுப்பட்ட நிலையில் பதில் பொலிஸ் மா அதிபராக சி.டி.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் ஒரு வருடமும் 7 மாதங்களும் குறித்த பதவியை வகித்து வந்ததுடன் பின்னர் 35 வது பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதியுடன் அவர் தமது கடமைகளில் இருந்து உத்தியோகப்பூர்வமாக ஓய்வுப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
