எதிர்வரும் 30-ஆம் தேதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தினை முன்னிட்டு சர்வதேச மாநாடாக யாழ்ப்பாணத்தில் தந்தை செல்வா மண்டபத்திலே ஒரு சர்வதேச மாநாடு ஒன்று நடத்துவதற்கு வடக்கு-கிழக்கு இணைந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையிலான பொதுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் ஒருஇடம்பெற்றது.
இந்த மாநாடு தொடர்பாகவும், இந்த மாநாட்டுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும், இந்த மாநாட்டுக்கு ஆதரவை ஆதரவைக் கேட்டுக்கொள்ளும் முகமாகவும் இந்தச் கலந்துரையாடல் அமைந்தது.
மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி திருமதி அ.அமலநாயகி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன், அதேபோன்று சிவில் செயற்பாட்டாளர்கள், மதகுருமார் அமெரிக்கன் மிஷன் அருட்தந்தை பாதர் டேவிட் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், அதேபோன்று ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
Travel Guides & Travelogues
