வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், முப்படைகளின் தளபதிகள், அமைச்சுகளின் செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள பொதுமக்களின் காணிகளை விரைவில் விடுவிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
