வில்பத்து தேசிய பூங்காவின் எல்லைப் பகுதியில் மருத மரங்கள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
பழைய எலுவங்குளம், நெலும்வெவ பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஊடகங்கள் மூலம் வெளிக்கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
